புதன், 18 பிப்ரவரி, 2009

பொதுவில் வைப்போம்


பெண் பார்க்கும் 
அவலம் போய் 
ஆண் பார்க்கும் 
படலம் வேண்டும்

போய் கடிதம் 
போடாமல் 
நேரில் சொல்லவும் வேண்டும் 
நெஞ்சுரம்.

பொதுவில் வைப்போம் 
இரு வீட்டார்க்கும் 
புலம்பலை.

பெண்ணுக்கு 
மூன்று முடிச்சு எனில்.,
ஆணுக்கும் போடட்டும் 
ஒன்றேனும் சூடு.

ஆண் நடக்கையில் 
மெட்டி ஒலி 
இசைக்கட்டும்.

ஆணுக்கும் அதுவே 
இருக்கட்டும் 
முதலிரவாய்.

காலில் விழாமல் 
கை குலுக்கி 
அரவணைப்போம்.

கனிவு பேச்சு 
கட்டளை அதட்டல் 
மிடுக்கான மிரட்டல் 
அனுதாப பாராட்டல் 
இத்தனையும் இருக்கட்டும் 
இருவர்க்கும் பொதுவாய்.


ஆனாலும்..
கருத்தரிப்பும் 
பிரசவிப்பும் 
பெண்ணுக்கே நிலைக்கட்டும்.

தாய்மையின் பெருமையை 
தரவும் முடியாது 
அதை நீ 
பெறவும் முடியாது 
ஆண் மகனே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Recent Comments