வியாழன், 19 பிப்ரவரி, 2009

அழியாச் சின்னங்கள்

வானம் எட்டிப் பார்க்க
மேகம் குடைபிடிக்க 
அண்ணாந்து பார்த்தால் 
இயற்கை அன்னையின் 
இருப்பிடமாய் 
எழில் கொஞ்சும் மலைகள் 
மரம் செடி கொடிகளுடன் 

பல்லவர்களின் திறமைகளை மக்கள் 
காணாமல் அறிந்திருக்க-இங்கே 
அவர்களில் கற்பனைக்கு 
விருந்தாக அமைந்துள்ளவை 
மாமல்லபுரத்தின் சிற்பங்கள்.

ஆறாம் நூற்றாண்டில் 
ஆண்டு அழிந்தார்கள் 
பல்லவர்கள் 
என்றால்..அது பொய்..

அழிந்துபோன மனிதனால் 
அற்புதமாய் வடிக்கப்பட்ட 
அழியாச் சின்னங்கள்- இன்று 
நம்மிடையே கம்பீரமாய் 
நிமிர்ந்து நிற்கின்றது.

மல்லையின் மணலிலே 
கால் பதித்தவுடன் 
காந்தவிசைக்குக் கட்டுப்பட்டாற்போல் 
மக்களை இழுத்து செல்வது 
மலையின் மேற்கில் அமைந்துள்ள 
கிருஷ்ண மண்டபம்.

மலையை குடைந்து 
மனதை மயக்கிடும் வண்ணம் 
மாபெரும் மண்டபத்தை 
உருவாக்கின பல்லவர்கள் 
இந்த குடவரை கோவிலுக்கு 
கிருஷ்ண மண்டபம் எனப் 
பெயர் சூட்டி மகிழ்ந்தனர்..

நரசிம்ம வர்மன் 
இராஜசிம்மன் 
இருவரின் பெயர் பொருத்தம் 
கொண்டவை 
அம்மண்டப்த் தூண்கள்..

குகைகுள் குடிய்ருக்கும் 
சிங்கத்தின் உருவத்தை 
குடைந்தெடுத்த தூண்களில் 
சிற்பமாக செதுக்கி 
நம்மை திகைக்க வைத்துள்ளனர்..

தாய்மொழி மீது 
தணியா தாகம் கொண்ட 
பல்லவர்கள் 
அம்மண்டப்த்தில் 
பாலிமொழி எழுத்துக்களை 
பாங்காய் வடித்துள்ளனர்..

புவியில் பூத்து 
புதுவழியில் புரண்டு 
புது நெறிகளை புஷ்பித்த 
 பூர்வீக புகழின் புண்ணியமூர்த்தி 
புத்தபெருமானின் 
கலாச்சாரத்தையும் 
காட்டி நிற்கிறது 
கிருஷ்ணமண்டபம்..

பாசத்தை பாலாய் பொழியும் 
பசுவினை சிசுவாய் எண்ணி 
பசுவின் உருவத்தை 
கிருஷ்ண மண்டபச் சுவர் 
தத்தெடுத்துள்ளது.

பசுவிடம் பால் கறப்பது 
பகவான் கிருஷ்ணன் 
என்பதைக் காண்கிறோம் 
ஆனால்..
அவர் தலையில் இருக்கும் 
புத்த மகுடம்தான் 
புரியாத புதிராய் 
நம்மை பிரம்மிக்க வைக்கிறது..

தாயின் நிழலில் 
தவமிருக்கும் 
சேயின் உருவம் 
நிஜத்தை தோற்கடிக்கின்றது..

எகிப்தின் பெருமையை 
பிரமீடுகள் சொல்ல் 
அதன் சாயலும் 
பிரதிபலிக்கின்றது 
இம்மண்டப சுவரில்.

மனித முகத்தையும் 
சிங்க உடலையும் கொண்ட 
இவ்வுருவம் 
பல்லவ எகிப்திய 
உறவை பறை சாற்றுகின்றது.

அயல்நாட்டவர் அறிய 
 
"ஸ்விங்க்ஸ்" என்பர் 
இந்த அதிசய உருவத்தை.

"கலைத்திறன் மிக்கவன் 
காலத்தை வெல்வான்"
என்ற சொல்லை 
உண்மைய் ஆக்கியது 
மற்றுமொரு அதிசயம்

ஒரெ வடிவத்தில் 
இரண்டு உருவங்க்ள் 
யானையை பார்த்தால் 
பசு இல்லை 
பசுவை பார்த்தால் 
யானை இல்லை
 


அடுக்களை விட்டு விடுதலையாகி 
புமி நோகா வண்ணம்
புல்கட்டு சுமந்து 
புது்பொலிவோடு 
வருகிறாள் ஆயர்மகள்..

செயற்கைக் குடையொன்று 
இயற்கைக்கு ஈடுதராதென 
கோவர்த்தன மலையையே 
குடையாகப்பிடிக்கின்றான் 
குழலூதும் கண்ணன்

மரங்களின் சிரங்களை 
சர்மாரியாக வெட்டி வீழ்த்திய 
வேகத்துடன் 
கட்டிய விறகும் 
வெட்டிய கோடாரியுமாய் 
வீதியிலே வருகிறான் 
ஆய்ர்குல மகன் 

தனக்கு மிஞ்சியே 
தானம் என்பது 
தற்கால  தர்மம் 
கறந்த பாலினில் கலப்பின்றி
உறைந்த தயிரை 
ஊருக்கு வழங்கிட 
உற்சாக நடையுடன் 
ஊர்லம் வருகிறாள் 
ஆய்ர்குடிப் பெண்.   
காலையில் சென்றவர்கள் 
கடமைகளை முடித்துவிட்டு 
கன்னியரின் கயல் கண்கள் 
கானம் பாடியதோ என்னவோ 
காற்றுவாக்கில் 
அந்தி வந்ததும் 
காத்திருந்தவர்கள் 
துணைவியரை எண்ணி 
துள்ளியோடி வருகிறார்கள் 

புதுமண த்ம்பதியருக்கே உரிய 
புது தெம்போடு 
புது மலர் சூடி 
களிறோடு வரும் பிடியினைப் போல் 
களிப்போடு வருறார்கள் 
அன்னமென அவள் நடக்க 
அவன் அவள் கை பிடித்து 
வயதை வயோதிகத்துக்கு  
தந்துவிட்டு 
இளமை கூட்டத்தில் 
இவர்களும் ஓர் நடைப்பயணி...

வானம் பொய்த்து விட்டால் 
வறுமைக்கு கொண்டாட்டம் 
பின்னால் திண்டாட்டம் 
வேண்டாமென 
வருணனை வேண்டி 
வரவிற்காய் காத்திருக்கின்றனர்.

ஆயர்களின் வாழ்க்கையை 
அணு அணுவாய் அனுபவித்து 
நேரில் கண்டவர்போல் 
நினைவுச்சின்னம் அமைத்திருக்கும் 
பல்லவனின் 
கலைத்திறனை 
என்னவென சொல்ல..?
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Recent Comments