புதன், 18 பிப்ரவரி, 2009

நாம் இருவர்


யார் சொன்னது 
நான் தனி மரமென்று..?
ஒவ்வொரு இரவிலும் 
எனக்காய் காத்திருக்கிறாய் நீ.

மொட்டைமாடியில் 
உன்னோடு உரையாடுவதும் 
காதல் கீதமிசைப்பதும் 
யாருக்கு தெரியும்..?

பிரிவற்ற உறவுக்காய் 
ஒப்பந்தமிட்டிருக்கிறோம் நாம்.

எட்ட இருந்து 
வட்டமிடும் 
வெண்ணிலாவே..
எப்போது நீ என் 
கிட்ட வருவாய்..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Recent Comments