புதன், 18 பிப்ரவரி, 2009

ஏக்கம்


ஐம்பதுபைசாவுக்கு 
அச்சு வெல்லம் 
இருபது பைசாவுக்கு 
எள்ளுருண்டை 
நாலணாவுக்கு 
நெல்லிகாய் 
வாங்கடா என் பேரனுங்களா 
நீங்கல்லாம் ஒழுங்கா 
பள்ளிகூடத்துக்கு வரணும், 
இந்த பாட்டிக்கிட்ட 
திங்கறதுக்கு வாங்கணும்..

மிட்டாயும் கேட்காமல் 
பள்ளி செல்ல வழியுமின்றி 
ஏக்கத்தோடு 
பார்த்துக்கொண்டிருக்கிறான் 
அந்த பாட்டியின் 
எட்டு வயது பேரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Recent Comments