புதன், 18 பிப்ரவரி, 2009

நிஜத்தில் எப்போது..?


உக்கிரமாகிறது உணர்வுகள் 
என் மனதில் 
நீ உதித்த நாள் தெரியவில்லை.

கடக்கும் இரவில் 
என் மூடா விழிகளுக்கு 
பால்நிலா
வாசிக்கிறது 
வரவேற்பு வாசகம்.

புன்னகையுடன் 
உன் கூந்தலுக்காய் 
பிச்சிபூக்கள் 
காத்து கிடக்கிறது.

பாதுகாத்த 
உன் பாதசுவட்டில் 
கண்ணாடியாய் 
தினமும் என் முகம் பார்க்கும் 
பரதன் நான்.

வானத்தை கிழித்து 
நீல வண்ண பாவாடையும் 
வானவில்லை வளைத்து 
மேலாடையும் தைக்கிறேன் 
உனக்கு.

ஒரு எச்சரிக்கை 
பூக்கள் 
காயப்படுத்த கூடும் என்பதால் 
நாளை முதல் 
நீ பூ பறிப்பதை தவிர்ப்பது நல்லது.

தோட்டத்து பூக்களின் 
வாசமெல்லாம் 
உன்னிலிருந்து 
நீ கிள்ளி கொடுத்த 
கடன்.

வா காதலி 
நாள் குறிப்போம் 
மணத்திற்கு. 

எந்த கிரகத்தில் நின்று 
கட்டட்டும் தாலி.,
தேனிலவுக்கு 
எங்கே போகலாம் சொல் 
செவ்வாயோ வியாழனோ..
எதுவும் சரி எனக்கு.

நம் தனிக்குடிதனத்தில் 
நீ சமைக்க வேண்டாம்.
உன் கைவிரல் பாடுகள் 
கிழித்துவிடும் 
என் இதயத்தை.

நிலாவில் உனக்கொரு வீடு 
விருந்தாளிகளாய் 
விண்மீன் கூட்டம்.

மாலை நேர 
சூரியனை சுரண்டி 
செந்தூரமாய் இடுவேன் 
உன் நெற்றியில்.

நான் தொட்டு சுருங்காத 
என் முதற் பூவே 
எப்போது நீ
நிஜத்தில் வருவாய்..? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Recent Comments