வியாழன், 19 பிப்ரவரி, 2009

பஞ்ச பாண்டவர் பள்ளி அறை

கிருஷ்ண மண்டபத்துடன் 
தொடர்புடைய 
மற்றொரு மண்டபம் 
பஞ்ச பாண்டவர் பள்ளியறை..

சிம்ம ராஜாக்களின் 
சின்னமாய் அமைந்த 
சிங்கமுகத் தூண்கள் 
இம்மண்டபத்தையும் வியாபித்துள்ளது.

முடல நர்சிம்ம வர்மன் 
வீரத்தில்வியந்து போன 
சாளுக்கிய மன்னன் 
இரண்டாம் புலிகேசி 
திறமையிட கொண்ட நம்பிக்கயை 
இமாத்தின் உச்சியில் 
போரிட்டும்,
தன் வெரத்த்தை விதவை ஆக்கி 
அவரிடம் தோற்றுப் போனார். 

இவர்களின் புரட்சியின் 
புரையோடலில் 
புலம்பியழுது 
தனை முழுமையாக் 
அலங்கரித்த்க்கொள்ளவில்லை 
இம்மண்டபம்.

மண்டப மத்தியில் 
மமதையில் நிற்கும் 
அறையின் தோற்றம் 
சைனக் கட்டிடப் பாணியை 
பதித்துள்ளது.

ஆனாலும் 
பாடசாலை செல்லா 
பாமர மக்களின்  
புதுமையான சிந்தனைக்கு -இவை 
புதுமண்ப்பெண்ணின் 
புன்னகையைப் போன்று 
பூத்துவிடத் துடிக்காத 
தாமரை மொட்டின்
சாயல் தோன்றும்.

கலைநயம் 
கண்களில் சுமந்த 
பல்லவர்கள் 
பாறையை உடைப்பதிலும் 
கையாண்டுள்ளனர்
புது யுக்திகளை.

கற்பனையும் கலைநயமும் 
காவியம் பாடுவதால் -இங்கு 
பஞ்சு மெத்தையும் 
பட்டு விரிப்பும் 
காணாமல் போனதோ -இந்த 
பாண்டவர் பள்ளியறையில்.

  

1 கருத்து:

priyamudan bala சொன்னது…

tamilagthin ennadru kidakum kalvetai pattri thodarinthu eluthavum .pallavan,pandian,cholan ena avargal katiya kovil vettiya kalvettu virinthu kidakirathu tamilagam.nedru gangaikondacholapuram chendren rajendracholan kattiya kovil thanjai kovil nagal pola.

கருத்துரையிடுக

Recent Comments