புதன், 18 பிப்ரவரி, 2009

துளிகள் சேரட்டும்

பிறந்த மகிழ்வில் 
இரவு முழுதும் 
உருண்டு திரண்டு 
புல்நுனிக்குள் 
பதுங்குகிறாய் 
பனித்துளியே..
விடிந்ததும் 
உன்னை 
விரட்டி துரத்த 
கிரண சாட்டையோடு 
உஷ்ணமாய் 
வருவான் 
அந்த சூரியன்.


அதுவரை 
உன் ஆயுளின் 
அந்திமத்துக்காய் 
உனக்கென 
நான் இசைப்பேன் 
ஒரு கானம்.

கேட்டு தலை ஆட்டி 
நீயும் 
துடைத்தெடு 
என் கண்ணீர் முத்துக்களை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Recent Comments