புதன், 18 பிப்ரவரி, 2009

உயிர் பெரிது


"மாலை வரும்போது 
சாக்லெட் பலூன் கேக் 
எல்லாம் வாங்கி வாப்பா 
நான் வாசலில் காத்திருப்பேன்"
அதிகாரியின் மகள்.



"சாயங்காலம் வரும்போது 
எனக்கு ஒன்னும் வாணாம் 
நீ மட்டும் 
பத்திரமா 
திரும்பி வாப்பா 
நான் கடலோரத்திலேயே 
காத்திருப்பேன்"
மீனவனின் மகள்.

1 கருத்து:

Unknown சொன்னது…

உலகத்திலேயே தன்னை வெளியே அழித்துச் செல்லும் வண்டிக்காரன்தான் உயர்ந்தவன் என்பது நரேந்திரனுக்கு நினைப்பாக இருந்தது இளமையில்! இராமகிருஷ்ணர் அறிமுகத்திற்குப்பின் எல்லாம் மாறீப்போனது.! மூச்சுக்காற்றின் அருமை தெரியும் பொழுது சாக்லெட்,பலூன்,கேக் மறைந்து அப்பா புரியும்.

கருத்துரையிடுக

Recent Comments