புதன், 18 பிப்ரவரி, 2009

கோலாகலம்

திருவிழா நிமித்தம் 
அலங்காரமாய் 
கிளம்பிய 
அம்மன் தேரும்..,

திருமண நிமித்தம்..
ஊர்வலமாய் 
கிளம்பிய..
அக்காளின் ஜானவாச காரும்..,
பழையபடி திரும்பின 
அதனதன் நிலைக்கு.




அலங்காரமிழந்த 
அம்மன் 
கருவறைக்குள்..,
என் அக்காளோ..
ஆம்படையான் 
கைப்பிடிக்குள்.

கோலாகலத்துக்கு பிறகான 
அலங்கோலத்துக்கு 
கட்டிய காப்பும் 
மிதித்த அம்மியும் 
பார்த்த அருந்ததியும் 
கை கொட்டி சிரிக்குது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Recent Comments