வியாழன், 19 பிப்ரவரி, 2009

கல்லும் கவிபாடும் கடல்மல்லை




கல்லும் கவிபாடும் கடல்மல்லை
மன்னர்களின் சாம்ராஜ்ஜியம் 
முடிந்துவிட்ட தமிழகத்தில் 
பல்லவனின் பெயர் சொல்லும் 
"மாமல்லபுரம்"

சாளுக்கியணை வென்று 
வாதாபியில் அரியணை ஏற்று 
மல்லர்களின் ஆட்சிக்கு 
முற்றுப்புள்ளி வைத்த 
முதலாம் நரசிம்மனின் 
சிறப்பு பெயரே 
"வாதாபி கொண்டான் மாமல்லன்"

இந்த மாமல்லனின் 
நினைவுசின்னமே 
இன்றைய 
"மாமல்லபுரம்" 
 
பல்லவனின் தலைநகராம் 
காஞ்சிமாநகரின் 
துறைமுகப் பட்டினமே 
இந்த மாமல்லபுரம்.


காஞ்சிக்கு கிழக்கில் 
வங்கத்தின் மேற்கில் 
பாண்டிக்கு வடக்கில் 
சென்னைக்கு தெற்கில்.

இறந்தகால பிரதேசத்தில் 
ஒளிந்து நின்று 
காலத்தால் அழியாப் புகழ் சூடி
வரலாற்று சுவட்டில் 
தடம் புரளா
தடைக்கல்லாய் 
நிலைத்து நிற்கும் 
"கடல் மல்லை"
கலைகள் அழியாது 
காவியம் பாடி நிற்கும் 
கடல்கொள்ளப்படா 
சிலை மல்லை.

 

இந்த மல்லையின் மகிமையும் 
சிற்பங்களின் கலை நுணுக்கமும் 
காண்கையில்.,
பல்லவ சிற்பிக்குக் 
கண்கள் இரண்டல்ல 
விரல் நுனி பத்திலும் 
பதினாயிரம் கண்களே
என தெரியும்.

பல்லவனின் கலைக் கண்ணாடியில் 
முகம் பர்ர்த்து மகிழ 
நாமும் பிரவேசிப்போமா
இக்கவிதை ஏட்டிற்குள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Recent Comments