புதன், 18 பிப்ரவரி, 2009

பலி


அன்றொரு நாள் 
மருத்துவமனையில் 
அவளுக்கும் 
பட்டியில் தவித்த 
ஆட்டுக்கும் 
நிகழ்ந்தது 
ஒரே நாளில் பிரசவம்.

ஆண் பிள்ளையும் 
ஆட்டுக்கிடாவும் 
வளர்ந்து களித்த 
மூன்றாமாண்டு முடிவில்.,
அய்யனாரப்பனின்..ஆசியுடன் 
வெட்டப்பட்டது 
கடாவின் கழுத்து.

பிள்ளையின் 
நல்வாழ்வுக்காய் 
உயிர் ஈந்தது ஆடு. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Recent Comments