புதன், 18 பிப்ரவரி, 2009

உம்மவளும் மருமவதான்


தங்கச்செல போல
மணப்பொண்ணு 
விருந்தாளிங்க கூடி நிக்க 
கெட்டி மேளம் கொட்ட 
வெரசா முடிஞ்சது 
நெல்லைசீமையில கலியாணம்.

மறாநா காலையில 
சீதன்ப்பொருள 
பிரிச்சு பார்த்து 
அதிர்ச்சியானா மாமியா..

வார்த்த சுத்தம் நழுவிட்டு 
பொண்ணுவீட்டா 
கொடுத்தால 
கொறையோடில்ல இருக்கு..?

கேட்டிருந்தாப்புல 
வெள்ளிசெட்ட காங்கல 
சொன்ன வாக்க காக்க்ல 
ஏ புள்ள 
ஒங்கொப்பனுக்கு 
புத்தி வரட்டும் 
நீ அங்கனயே போயி கெட.

மருமவள் கொண்டு போயி 
விட்டுட்டு 
வீடு திரும்பின 
மாமியா காரிக்கு 
காத்திருந்துச்சி அதிர்ச்சி.

கேட்ட நூறு பவுன்ல
பாதிய தங்கமாவும் 
மீதிய மாத்தாவும் 
போட்டாகள்ல..
பெத்த மவளுக்கு.., 
அவ மாமியா 
வெரட்டிவிட 
பொறந்த வீட்டுக்கு 
வந்திருக்கு பொண்ணு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Recent Comments