புதன், 18 பிப்ரவரி, 2009

கை குட்டை


உனக்கு தெரியாமல் 
நானெடுத்த 
உன் கைகுட்டையை 
பிரித்தால் 
உன் வாசம் போய்விடுமென 
பதறி..
பத்திரப்படுத்தினேன்..
பிரிக்காமலே.
பிறகுதான் புரிந்தது 
என்னை 
பிரிவதற்காகவே..
என்னருகில் நீ விட்டுப்போன 
நினைவு சின்னம் 
அது என்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Recent Comments