புதன், 18 பிப்ரவரி, 2009

வேறுபாடு


"வாசலில் நிற்காதே"
"பூமி நோக நடக்காதே"
"சத்தம் போட்டு சிரி்க்காதே"
"ஆண்களிடம் பேசாதே"
ஏனென்றால்
நீ வயசுக்கு வந்துட்ட.

கட்டளைகள் 
கேள்வி கேட்கிறது என்னை.

என் வயது 
எதிர்வீட்டு பையன் 
எங்கும் சென்று 
எப்போதும் வருகிறான் 
அவனுக்கில்லை 
கட்டளையும் காவலும்.

அவன் வரவில்லையா
வயசுக்கு..?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Recent Comments